அமீரக செய்திகள்

லிபியாவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக லிபிய கொடியால் ஒளிர்ந்த புர்ஜ் கலீஃபா!

அபுதாபி
டேனியல் புயலால் ஏற்பட்ட கொடிய வெள்ளத்தில் 5,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள சின்னமான அடையாளங்கள் செப்டம்பர் 13 புதன்கிழமை இரவு லிபியாவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒளிர்ந்தது.

உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா மற்றும் அபுதாபியில் உள்ள அட்நாக் தலைமையகம் ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக லிபிய கொடியால் ஒளிரச் செய்யப்பட்டன.

“ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து, லிபியா மக்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் எண்ணங்கள் லிபியாவுடன் உள்ளன” என்று அட்நாக் கட்டிடத்தில் ஒரு செய்தி காட்டப்பட்டது.

X-ல், UAE மீடியா அலுவலகம் சின்னமான கட்டிடங்களின் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, “#லிபியாவின் சகோதர மக்களுக்கு… எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்… எங்கள் இதயங்கள் உங்களுடன் உள்ளன, உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்று பதிவிடப்பட்டிருந்தது.

கீழே உள்ள வீடியோவை இங்கே பாருங்கள்:

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button