மேற்கு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 120-ஆக உயர்வு

மேற்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமையன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை “சுமார் 120” ஆக உயர்ந்துள்ளது என்று பேரிடர் நிவாரண அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலநடுக்கம் பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமான ஹெராட்டின் வடமேற்கே 40 கிமீ தொலைவில் இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து 4.3 மற்றும் 6.3 ரிக்டர் அளவில் எட்டு நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“இதுவரை, காயமடைந்த 1,000 க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான குடிமக்கள் எங்கள் பதிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர், மேலும் சுமார் 120 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று ஹெராத் மாகாண பேரிடர் மேலாண்மைத் தலைவர் மோசா அஷாரி தெரிவித்தார்.
காலை 11 மணியளவில் (0630 GMT) நிலநடுக்கங்கள் தொடங்கியதையடுத்து, ஹெராட்டில் உள்ள கட்டிடங்களில் இருந்து மக்கள் கூட்டம் வெளியேறியது.
சனிக்கிழமை மாலை, பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் முல்லா ஜான் சயீக், இறப்பு எண்ணிக்கை “மிக அதிகமாக உயரும்” என்று எதிர்பார்க்கப்படுகிறது. “சில பகுதிகள் முற்றிலும் இடிந்து விழுந்து அனைத்து வீடுகளும் சேதமடைந்துள்ளன, மக்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டு இருக்கிறார்கள். உதவி நிறுவனங்கள் அப்பகுதியை அடைய முயற்சி செய்கின்றனர்.” என்று தெரிவித்தார்.



