இந்தியா செய்திகள்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்… தலைவர்கள் அஞ்சலி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்ட தலைவர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
#tamilgulf



