நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளை சந்தித்த நேபாளத்திற்கு இரங்கல் தெரிவித்த ஐக்கிய அரபு அமீரகம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேபாளத்தின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான இறப்புகள் மற்றும் காயங்களின் விளைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஒற்றுமையையும் தெரிவித்தது .
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் (MoFA) வெளியிட்ட ஒரு அறிக்கையில், நேபாள கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 140 பேர் பலியாகியுள்ளனர். மீட்பு குழுவினர் இடிபாடுகளுக்கு அடியில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



