அமீரக செய்திகள்

துபாய்-கொச்சி விமானத்தில் மது அருந்திய நான்கு பயணிகள் ஹைதராபாத்தில் காவல்துறையிடம் ஒப்படைப்பு

துபாயில் இருந்து கொச்சிக்கு சென்ற விமானம் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (ஆர்ஜிஐஏ) அவசரமாக தரையிறக்கப்பட்டது, வியாழன் அன்று இளைஞர்கள் நான்கு பேர் குடிபோதையில் சக பயணிகள் மற்றும் கேபின் பணியாளர்களை தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

விமானத்தில் மது அருந்திய நான்கு பயணிகள் நடுவானில் முதலில் சக பயணிகளுக்கு தொல்லை கொடுக்கத் தொடங்கினர். மேலும், அவர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக, பயணிகள் விமானக் குழுவிடம் புகார் அளித்தனர், அவர்கள் தலையிட்டு இளைஞர்களை சமாதானப்படுத்த முயன்றனர், ஆனால் பலனில்லை. போதையில் இருந்த பயணிகள் விமான ஊழியர்களையும் தாக்க முயன்றனர்.

பின்னர் கேபின் குழுவினரால் எச்சரிக்கப்பட்டதையடுத்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். இதனால் ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்க விமானிகள் முடிவு செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தை(RGIA) அடைந்ததும், பாதுகாப்புப் பணியாளர்கள் நான்கு பேரையும் காவலில் எடுத்து, RGIA காவல்துறையிடம் ஒப்படைத்தனர், அவர்கள் விமான ஊழியர்களின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button