அமீரக செய்திகள்

செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு முன்னர் எந்தவொரு பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது- தேர்தல் குழு

எதிர்வரும் தேசிய சபைத் தேர்தலுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெறும் அனைத்து வேட்பாளர்களுக்கும் தேசிய தேர்தல் குழு கடுமையான எச்சரிப்பு ஒன்றை விடுத்துள்ளது. செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு முன்னர் எந்தவொரு பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு பின்னர் தொடங்கி அக்டோபர் 3 வரை 23 நாட்களுக்கு பிரச்சாரம் தொடரும்.

ஒரு தெளிவான உத்தரவில், நியமிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு வெளியே எந்தவொரு விளம்பர முயற்சிகளிலும் ஈடுபடுவது தேர்தல் அறிவுறுத்தல்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விதிகளை நேரடியாக மீறுவதாகும் என்று தேசிய தேர்தல் குழு கூறியது.

எச்சரிப்பை மீறுபவர்கள் பல்வேறு அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும், அத்தகைய செயல்களால் ஏற்படும் சேதங்களை சரிசெய்தல், 10,000 திர்ஹம்களுக்கு மிகாமல் அபராதம், வேட்பாளருக்கு வழங்கப்பட்ட பிரச்சார அனுமதியை ரத்து செய்தல், கடுமையான சந்தர்ப்பங்களில், வேட்பாளர்களின் பெயர் இறுதியானதாகக் கருதப்பட்டாலும், பட்டியலில் இருந்து நீக்கப்படலாம்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு நியமிக்கப்பட்ட இடங்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், நிர்வாக அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கவும் குழு தெரிவித்துள்ளது.

2023 ஃபெடரல் நேஷனல் கவுன்சில் தேர்தலுக்கான பூர்வாங்க பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ள தனிநபர்களின் வேட்புமனு மீதான ஆட்சேபனைகளைப் பெறுவதற்கான காலக்கெடு முடிவடைவதாக நேற்று குழு அறிவித்தது. வரும் சனிக்கிழமை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button