உலக செய்திகள்சிறப்பு செய்திகள்

சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்த லூனா-25… வருகிற 21-ந்தேதி நிலவில் தரையிறக்க திட்டம்!

ரஷியா ஏவிய லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க விண்வெளி ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை ரஷியா கடந்த 11-ந்தேதி விண்ணில் ஏவியது. இந்த நிலையில் லூனா-25 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்துள்ளது. அந்த விண்கலம் சுமார் 5 நாட்கள் நிலவை சுற்றி வரும். வருகிற 21-ந்தேதி லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்தியாவின் இஸ்ரோ ஏவிய சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் வருகிற 23-ந்தேதி தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button