கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியாவில் நிகழ்ந்த கார் விபத்தில் ஜோர்டானைச் சேர்ந்த ஒருவரும் அவரது நான்கு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். உம்ரா பயணம் முடித்து ஐக்கிய அரபு அமீரகம் சென்று கொண்டிருந்த குடும்பத்தினர், சவுதி அரேபியாவில் மக்காவிற்கும் ரியாத்துக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் சிக்கியுள்ளனர்.
இதில் தந்தை மற்றும் நான்கு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாய் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து திங்கள்கிழமை இரவு மனைவியின் சகோதரி பேஸ்புக் பதிவில் கூறியதாவது:-
“கடவுளின் விருப்பம் மற்றும் விதியின் மீது நம்பிக்கை கொண்டு, எனது சகோதரியின் கணவர் மாலெக் கோர்மா மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகளான அக்ரம், மாயா, டானா மற்றும் டிமா ஆகியோரை இழந்ததற்காக நாங்கள் துக்கப்படுகிறோம், அவர்கள் சவூதி அரேபியாவில் ஒரு போக்குவரத்து விபத்துக்குப் பிறகு கடவுளின் கருணைக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் உம்ராவின் புனிதமான சடங்குகளைச் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்” என்று கூறினார்.
விபத்து எப்போது, எப்படி நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, அதிகாரிகளால் எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. சவூதி அரேபியாவில் உள்ள ஜோர்தான் தூதரகத்தின் பிரதிநிதியான ஹைதம் கத்தாப், தந்தையும் அவரது நான்கு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஜோர்டானிய ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மருத்துவ அறிக்கைகளின்படி, முனா கோர்மா இப்போது குணமடைந்து வருவதாக அவர் கூறினார்.



